வெளிநாட்டில் படிச்சனு சொல்றாங்க, ஆனா அதுக்கான தகுதி கொஞ்சம் கூட இல்ல : நிதியமைச்சர் பிடிஆர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவை தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பெரிய கடை வீதியில் பணிபுரியும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மத்திய அரசின் திட்டங்களில் பதிவு செய்வதற்காக விழாவுக்கு வருகை தந்தனர்.

அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து அடையாள அட்டைகள் தரப்பட்டன. இந்த நிகழ்வுக்கு அந்த தொகுதியின் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் வருகை தந்தார்.

அவர் பேசுகையில் பிரதமர் மோடி , மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் 5 லட்சம் ரூபாய்க்கான ஆயுஷ் மான் பாரத காப்பீடு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் நிதியுதவி, உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கும் இ ஷாரம் திட்டம் ஆகியன முக்கியமானவை.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் இ ஷாரம் திட்டத்தில் பதிவு செய்தவற்கான இலவச முகாமில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த திட்டத்தை மாநில தொழிலாளர் நலத் துறை சார்பில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

அதிக அளவு தொழிலாளர்களை கொண்ட தமிழகத்தில் இந்த திட்டம் குறித்து முகாம்கள் நடத்தி அமைப்பு சாரா தொழிலாளர்களை இந்த திட்டத்தில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்துதான் சட்டசபையில் பேசிய போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தற்போது இந்த திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மத்திய அரசின் நலத் திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைத்தாலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கீழ்த்தரமான விமர்சனங்களை வைக்கிறார்.

தான் வெளிநாட்டில் படித்தவர், மத்திய அரசு அறிவுரை கூற என்ன நோபல் பரிசா வாங்கினார்கள் என அவர் கேட்கிறார். இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின்தான் பதில் கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் அவர் சொல்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை என்றும் விளக்கமளித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

23 minutes ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

58 minutes ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

1 hour ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

3 hours ago

வெளியே வந்ததும் உன்னை கொன்னிடுவேன்… நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்!

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…

3 hours ago

This website uses cookies.