மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரின் பேச்சை தான் கேட்பார்கள்.. ஆளுநர் பேச்சையா கேட்பாங்க : பேரிடர்ல அரசியல் செய்யாதீங்க!
முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதி கேட்கவும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் டெல்லி சென்றுவிட்டார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யவும் மீட்பு பணிகள் குறித்து விவாதிக்கவும் ஆட்சியர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி மத்திய அமைப்புகள், ஆயுத படைகளின் உயர் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் சென்னை ராஜ்பவனில் நடந்தது. இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமான படை, தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இந்த கூட்டம் நடந்தது.
இதில் மாநில அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. முதல்வர் இல்லாத நிலையில் ஆளுநர் கூட்ட நினைத்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில அரசு அதிகாரிகளே வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து எஸ்வி சேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவர்னர் ஆட்சி இல்லாதபோது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும், ஆட்சியில் உள்ள முதல்வர் சொன்னாதான் அதிகாரிகள் கேப்பாங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கே முழு அதிகாரம். இந்த பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
6 மாதம் கழித்து வரப்போகிற தேர்தலில் இந்த மழை வெள்ளத்தை வைத்து அறுவடை செய்ய நினைப்பதைவிட வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை கை தூக்கி உதவுங்கள். அந்த தர்மம் உங்களை காக்கும் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.