கோவிலில் திருடி 100 கோடி சொத்து: கில்லாடி மனிதர் சிக்கியது எப்படி? வெளியில் வந்த தில்லு முள்ளு…!!

திருப்பதி கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரிய ஜீயர் மடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார், தேவஸ்தான ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர் 20 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அவரை கண்காணித்து தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த சோதனையில் அவர் தன்னுடைய ஆசனவாயில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலரை திருடி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்மீது தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், ரவிக்குமாரைக் கைதுசெய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணையில் அவர் திருடிய பணத்தில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் என ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்து வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துபவர்களிடம் அறிவுரை கேட்டு ரவிக்குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலை பெரிதுப்படுத்தி கொண்டார் என்பது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. காணிக்கை விவகாரம் வெளியில் தெரிந்தால் கோயில்மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி, இந்த விவகாரத்தை லோக் அதாலத்திற்கு கொண்டு சென்றது தேவஸ்தானம்.சமரசம் பேசிய லோக் அதாலத் அதிகாரிகள், ரவிக்குமார் திருடி வாங்கி குவித்த சொத்துகளில் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த முடிவிற்கு அப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்தது.

இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Sudha

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

5 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

7 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.