திருப்பூர் : நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி ஆகலாம். அதேபோல் இன்றைய முதலாளி , நாளைய தொழிலாளியாகலாம் என்பது திருப்பூருக்கு பொருந்தும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்னும் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, இந்த மாநாட்டை தொடங்கி வைத்ததுடன், ரூ.168 கோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி வைத்தார்.
பின்னர், அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது :- சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டம் திருப்பூர் ஆகும். 57,900 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு, குறு நடுத்தர தொழில்களின் பங்கு அதிகம்.
தொழிலதிபர்களாக வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி ஆகலாம். அதேபோல் இன்றைய முதலாளி , நாளைய தொழிலாளியாகலாம் என்பது திருப்பூருக்கு பொருந்தும்.
இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.