திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 14 வார்டுகளில் திமுக கூட்டணியும், 1 அதிமுக வேட்பாளரும், 3 சுயேட்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக 11வது வார்டில் வெற்றி பெற்ற சுமதி தமிழ்உதயன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை தலைவர் பதவிக்கு திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுமதி தமிழ்உதயன் மற்றும் 10வது வார்டில் வெற்றி பெற்ற அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து மீஞ்சூர் பேரூராட்சி கூட்ட அரங்கில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.
மறைமுக வாக்கெடுப்பு முடிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ் 9 வாக்குகள் பெற்றார்.
திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் மருமகளை குலுக்கல் முறையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகலிங்கத்தின் மருமகளும், நகர செயலாளரின் மனைவியுமான ருக்மணி எதிர்த்துப் போட்டியிட்டு குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.