இது FAKE NEWS… நல்ல போட்டோவா Use பண்ணுங்க : கிண்டல் செய்த கிருத்திகா… ரியாக்ஷன் கொடுத்த உதயநிதி!!

சமீபத்தில் அமலாக்கத்துறை சார்பில் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கல்லல் பவுண்டேஷன் உள்பட பல நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதாவது கல்லல் நிறுவனத்துக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே பணப்பரிமாற்றம் இருந்து வந்தது.
இந்நிலையில் தான் கல்லல் நிறுவனம் மோசடி செய்தாக லைகா சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை நுழைந்தது. இதையடுத்து தான் அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் சோதனைகள் நடந்தன. இந்த சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் சோதனைக்கு உள்ளான கல்லல் பவுண்டேஷனுக்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதயநிதி அறக்கட்டளையின் சார்பில் வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது.
இதற்கிடையே தான் அமலாக்கத்துறை சார்பில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் உள்ள ரொக்கப்பணம் மற்றும் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கடந்த 25.5.2023ல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் ட்விட்டர் பதிவை பார்த்த பலரும் உதயநிதியின் மனைவியான கிருத்திகா உதயநிதியின் பெயரில் அறக்கட்டளை இருப்பதாகவும், அதன் சொத்துகள் மற்றும் ரொக்கப்பணம் முடக்கப்பட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் செய்திகளை பரப்பினர்.

இதனை பார்த்த கிருத்திகா உதயநிதி, தனது ட்விட்டர் பக்கத்தில் போலி செய்திகள் வெளியிடுவோரை கிண்டல் செய்திருந்தார். இதுதொடர்பாக கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛என்னைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். செய்தியில் குறைந்தபட்சம் நல்ல போட்டோவையாவது பயன்படுத்துங்கள்” என கிண்டலடித்து இருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை பார்த்த அமைச்சர் உதயநிதி உடனடியாக ரியாக்சன் செய்திருந்தார். அதாவது கிருத்திகா உதயநிதியின் ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி சிரிக்கும் ஸ்மைலி ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து திமுகவினர் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். இது தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

5 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

6 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

7 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

7 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

7 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

8 hours ago

This website uses cookies.