இது FAKE NEWS… நல்ல போட்டோவா Use பண்ணுங்க : கிண்டல் செய்த கிருத்திகா… ரியாக்ஷன் கொடுத்த உதயநிதி!!

சமீபத்தில் அமலாக்கத்துறை சார்பில் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கல்லல் பவுண்டேஷன் உள்பட பல நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதாவது கல்லல் நிறுவனத்துக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே பணப்பரிமாற்றம் இருந்து வந்தது.
இந்நிலையில் தான் கல்லல் நிறுவனம் மோசடி செய்தாக லைகா சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை நுழைந்தது. இதையடுத்து தான் அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் சோதனைகள் நடந்தன. இந்த சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் சோதனைக்கு உள்ளான கல்லல் பவுண்டேஷனுக்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதயநிதி அறக்கட்டளையின் சார்பில் வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது.
இதற்கிடையே தான் அமலாக்கத்துறை சார்பில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் உள்ள ரொக்கப்பணம் மற்றும் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கடந்த 25.5.2023ல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் ட்விட்டர் பதிவை பார்த்த பலரும் உதயநிதியின் மனைவியான கிருத்திகா உதயநிதியின் பெயரில் அறக்கட்டளை இருப்பதாகவும், அதன் சொத்துகள் மற்றும் ரொக்கப்பணம் முடக்கப்பட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் செய்திகளை பரப்பினர்.

இதனை பார்த்த கிருத்திகா உதயநிதி, தனது ட்விட்டர் பக்கத்தில் போலி செய்திகள் வெளியிடுவோரை கிண்டல் செய்திருந்தார். இதுதொடர்பாக கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛என்னைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். செய்தியில் குறைந்தபட்சம் நல்ல போட்டோவையாவது பயன்படுத்துங்கள்” என கிண்டலடித்து இருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை பார்த்த அமைச்சர் உதயநிதி உடனடியாக ரியாக்சன் செய்திருந்தார். அதாவது கிருத்திகா உதயநிதியின் ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி சிரிக்கும் ஸ்மைலி ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து திமுகவினர் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். இது தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

3 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

3 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

4 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

4 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

5 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

5 hours ago

This website uses cookies.