அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அவிநாசி அத்திக்கடவு திட்டம் திமுக அரசு தற்போது ஆமை வேகத்தில் செயல்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குண்டடத்தில், பிற கட்சிகளில் இருந்து அதிமுக.,வில் இணையும, இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படுவதாகவும், மாற்று கட்சியிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே முக்கிய மந்திரி பதவிகள் கொடுத்திருப்பதாகவும், ஆட்சியில் சம்பாதித்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற உதயநிதி திரைப்படங்களில் நடித்து வருவதாக விமர்சனம் செய்தார்.
திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கமிசன் பெறும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்றும், திமுக.,வின் திரைத்துறை ஆதிக்கத்தால் 150க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்களாகியும் பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்து விட்டது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அதிமுக கொண்டு வந்த காரணத்திற்காக அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக தற்போது செயல்படுத்தி வருகிறது. மாண்டஸ் புயலால் பாதிப்பில்லை. ஆனால் இதில் சிறப்பாக செயல்பட்டதாக திமுக அரசு பொய் சொல்லி வருகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வெல்வோம் என்று பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் பங்கேற்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.