கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள் : பாஜகவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!!
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல் கோயில்களில் குண்டர்கள் போல எல்இடி திரைகள் அமைத்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர் என தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு அன்று பிராண பிரதிஷ்டை நிகழ்வை நேரலையில் ஒளிபரப்ப தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டிய நிலையில், அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
மேலும், இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இதனால் இன்றிலிருந்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து செயல்படாது. தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்து உரிமையளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட முடியாது. மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும்.
தமிழ் அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்களின் வசதிக்காக திட்டமிட்டு கட்டப்பட்டது, ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்றார் போல் கிளாம்பக்கத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றது போல் செயல்பட வேண்டும் என்றுள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள், ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதற்கான இடம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. எனவே, பணிகள் அனைத்தும் முடிந்து ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவோம் என கூறியிருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.