ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இவரது உடல் இரு நாட்களுக்கு பின் மதுரை கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே அஞ்சலி செலுத்துவதில் திமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எரிந்துள்ளார்.
இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர், பாஜகவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
அதில் மதுரை பாஜக மாவட்ட துணைத் தலைவர் மார்க்கெட் குமார், பாலா, திருச்சியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, கோபிநாத் மற்றொரு கோபிநாத் என 5 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் ஆகியோரை அவதூறாக பேசியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சரின் கார் செருப்பு வீசியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நான் வன்முறையை கையில் எடுக்கக் கூடிய கட்சியை நடத்தவில்லை. தொண்டர்கள் யாருக்கும் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப் போவதும் கிடையாது. நமது கட்சி ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக் கூடிய கட்சி பாஜக என்று தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.