திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வள்ளி குகை கோவில் செல்லும் நடைபாதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் 5 மணி நேரமாக சிறப்பு யாகம் நடத்துவதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் பல்வேறு யாகங்கள் வளர்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேற்று இரவு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்தார். இன்று அதிகாலை வள்ளி குகை செல்லும் நடை பாதையை மறித்து சத்ரு சம்கார லட்சார்ச்சனை ஹோமம் நடத்தினார்.
இதனால் பக்தர்கள் வள்ளி குகைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரமாக காத்திருந்தனர். வெகுநேரம் காத்திருந்த பக்தர்கள் கோவில் தனியார் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் தர்மபுரி எம் பி செந்தில்குமார் பூமிபூஜை நிகழ்ச்சியில் இந்து அர்ச்சகரை கொண்டு பூஜை செய்வதற்காக அதிகாரிகள் மீது கோபம் கொண்டு திட்டினார்.
திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மதத்தினரும் சமம் என்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரையும் அழைத்து நடத்த வேண்டும் என அதிகாரி மீது கோபம் கொண்டார். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பரிகார பூஜைக்காக இந்து அரசர்கள் கொண்டு தனியாக யாகம் நடத்தியது கடும் கேள்விகுள்ளாக்கி இருக்கிறது.
மேலும் திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம், சமூக நீதி என மார்த்தட்டி வரும் நிலையில் தனி ஒருவருக்காக கோவிலை அடைத்து பக்தர்களை அனுமதிக்காமல் தனியாக யாகம் நடத்தியது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
This website uses cookies.