திருப்பூர்; சட்டமன்றத்தில் பேசினால் உன் வேலை போய்விடம் என்று நிகழ்ச்சியில் சொல்ல மறந்த பொறியாளரை திமுக எம்.எல்.ஏ திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பார்வையிட்டார். இதனையடுத்து, அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் திமுகவைச் சேர்ந்த தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வில் பேசிய பொறியாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் பெயரை கூற மறந்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.செல்வராஜ், என் பெயரை ஏன் சொல்லவில்லை, சட்டமன்றத்தில் பேசினால் உன் வேலை போய்விடும் என்று சொல்ல, பயந்து போன பொறியாளர் சாரி என்று கூறினார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த திமுக எம்எல்ஏ செல்வராஜ், சாரியும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்ல, கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.