திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வரும் டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீபத்திருநாளன்று அண்ணாமலையாரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500க்கும் மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு, கண்காணிப்பு கேமராவை கோவில் நிர்வாகம் பொறுத்தியுள்ளது. கோவில் நிர்வாகத்தின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இந்து அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பையும் கிளப்பியது.
இதையடுத்து, உடனடியாக துவாரபாலகர் நெற்றியில் இருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி வேறு இடத்தில் மாற்றி பொறுத்தப்பட்டது.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.