திடீரென மின்கட்டணம் அதிகரிப்பு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ; அதிர்ச்சியில் தொழில் நிறுவனங்கள்…!!

சென்னை ; வணிக, தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்தகால ஆட்சியில்‌ இருந்த திறனற்ற மேலாண்மையால்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்தின்‌ ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும்‌, ஒன்றிய அரசின்‌ 9 நவம்பர்‌ 2021 ஆணையின்படி மின்‌ எரிபொருள்‌ மற்றும்‌ கொள்முதல்‌ விலை உயர்வினை உடனுக்குடன்‌ நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மேலும்‌, 2022ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதத்தில்‌ ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின்‌ கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும்‌ பெற வேண்டும்‌.

இந்த விலை உயர்வினால்‌ ஏற்படக்கூடிய சுமையைக்‌ குறைக்கும்‌ வகையில்‌, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்‌ 09.09.2022 அன்று 2022-23 முதல்‌ 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின்‌ கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில்‌ 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும்‌ 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும்‌ ஜூலை 1 முதல்‌ அமலுக்கு வரும்‌ வகையில்‌ கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும்‌, ஏப்ரல்‌ மாதத்திற்கான நுகர்வோர்‌ விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின்‌ ஏப்ரல்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்ணுடன்‌ ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும்‌ நுகர்வோர்‌ பணவீக்க உயர்வு அல்லது 6%, இவற்றில்‌ எது குறைவோ அந்த அளவில்‌ மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்‌.

இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப்‌ பொறுத்தவரையில்‌, 2022 ஏப்ரல்‌ மற்றும்‌ 2023 ஏப்ரல்‌ ஆகியவற்றின்‌ நுகர்வோர்‌ விலைக்‌ குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால்‌, 4.7 சதவீதம்‌ மின்கட்டணம்‌ உயர்த்தப்பட வேண்டும்‌. இந்த நடைமுறையை ஆய்வு செய்த
மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, மாண்பமை ஆணையத்தின்‌ உத்தரவை செயல்படுத்தும்‌ போது பொதுமக்கள்‌ பாதிக்கப்படாமல்‌ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌ என்று அறிவுறுத்தினார்கள்‌.

இதன்படி கட்டண உயர்வு விகிதம்‌ மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌ கட்டணம்‌ உயர்த்தப்பட்ட நிலையில்‌, 2022 ஏப்ரல்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட்‌ மாதத்தின்‌ விலை குறியீட்டு எண்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்டது. இதனால்‌ கட்டண உயர்வின்‌ அளவு 4.7 %லிருந்து 2.18% ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும்‌ பொதுமக்களை பாதுகாக்கும்‌ நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும்‌ 2.18 % உயர்வையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்று, மின்‌ வாரியத்திற்கு மானியமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

அ) இந்த முடிவால்‌ வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும்‌ இருக்காது.
ஆ) வேளாண்‌ இணைப்புகள்‌, குடிசை இணைப்புகள்‌, வீடுகளுக்கு 100 யூனிட்‌ இலவச மின்சாரம்‌, கைத்தறி, விசைத்தறிகள்‌ போன்றவைகளுக்கு அளிக்கப்படும்‌ இலவச மின்சாரச்‌ சலுகைகள்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌.

(இ) வணிக மற்றும்‌ தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரை மிகக்‌ குறைந்த அளவில்‌ மின்கட்டணம்‌ உயரும்‌.

இந்த ஆண்டு நமது நாட்டின்‌ பிற மாநிலங்களில்‌ வீட்டு இணைப்புகள்‌ உள்ளிட்ட அனைத்து மின்‌இணைப்புகளுக்கும்‌ மின்‌ கட்டணங்கள்‌ உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும்‌ போது – மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்‌), கர்நாடகா (70 பைசா/யூனிட்‌), அரியானா (72 பைசா/யூனிட்‌), மத்திய பிரதேசம்‌ (33 பைசா/யூனிட்‌), பீகார்‌ (147 பைசா/யூனிட்‌) – தமிழ்நாட்டில்‌ வீட்டு மின்‌இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள்‌ எவ்விதமும்‌ உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும்‌ தொழில்‌
மின்இணைப்புகளுக்கும்‌ மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள்‌ உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

6 minutes ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

22 minutes ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

39 minutes ago

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

1 hour ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

2 hours ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

3 hours ago

This website uses cookies.