குரூப் 2 போட்டித் தேர்வு எழுத 2 நிமிடங்கள் தாமதமாக வந்த தேர்வர்களை, அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கோட்டம், குளித்தலை கோட்டம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு 17,111 பேர் போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர்.
துணை ஆட்சியர் நிலையில் 8 பறக்கும் படைகளும், பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மையத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வீடியோ கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் 880 அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் தேர்வு எழுத வந்தவர்கள் தங்கள் அறையை தேடிச் சென்று தனது இருக்கையில் அமர்ந்து தேர்வு எழுத தயாராகினர். அவர்களுக்கு வினாத் தாள்கள் பிரிக்கப்பட்டு 9 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கி தேர்வு எழுத தயாராகினர்.
அதில் ஒரு சிலர் காலை 9.02 மணிக்கு பள்ளிக்கு வந்த அவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டனர். தேர்வு துவங்கி விட்டதால் அனுமதிக்க முடியாது எனக் கூறி தேர்வர்களை, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். நுழைவு வாயில் மூடப்பட்டும் தேர்வெழுத வந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணவருடன் தேர்வு எழுத வந்த மனைவியை கால தாமதம் என்று கூறியதோடு, 9.02க்கு வந்ததால் உள்ளே தேர்வு எழுத அனுமதி இல்லாததால் கணவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.