சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இந்த விலை உயர்வு விற்பனையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு தலை சுற்றவே வைத்துள்ளது. விலை உயர்வை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது தமிழக அரசு.
வரத்து குறைவால் விலை உயர்ந்த தக்காளியின் விலை, நேற்று வரத்து அதிகரிப்பினால் 30 ரூபாய் குறைந்து காணப்பட்டது. இதனால், ஒரு கிலோ தக்காளி 80 முதல் 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கனிசமாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ.30 அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று குறைந்து காணப்பட்டு வந்த தக்காளி விலை, இன்று ஒரே நாளில் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.