மோதிக்கொண்ட சரக்கு – எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 2 பேர் பலி; ஜார்கண்டில் பயங்கரம்,..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மும்பை – ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.ஹவுராவில் இருந்து மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த ரயில் அதிகாலை 03.45 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது இவ்வழித்தடத்தில் ஏற்கனவே தடம் புரண்ட சரக்கு ரயில் மீது ஹவுரா – மும்பை பயணிகள் விரைவு ரயில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ள நிலையில் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் விபத்து சம்பவம் ரயில் பயணிகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.கிட்டத்தட்ட 300 போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sudha

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

2 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

2 hours ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

3 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

4 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

5 hours ago

This website uses cookies.