2021 சட்டமன்றத் தேர்தலின் போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக திமுக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறியிருந்தது.
ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்
ஓய்வூதியதாரர்களின் 103 மாத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும்
பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளையும் இன்னும் சில கோரிக்கைகளையும் வலியுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன.
இதை அடுத்து தொழிலாளர் ஆணையத்தின் இணை ஆணையர் ஜூலை 24ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்
இது போன்ற சமரச பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே பல முறை நடந்துள்ளன. ஆனாலும் எதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மார்ச் 6ம் தேதி நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே ஜூலை 24 சமரச பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது அன்றைய தினம் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.