திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் ஒதுக்கப்பட்ட இரு வார்டுகளில், கணவன் மற்றும் மனைவியே போட்டியிடுவது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்.,19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி, பாஜக, பாமக என பல்முனை போட்டி நிலவுகிறது. இடப்பங்கீட்டை முடித்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 2 வார்டுகள் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 2 வார்டுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி மற்றும் அவரின் மனைவி வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
19வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாக குழு உறுப்பினர் தங்கமணியும், 19வது வார்பில் அவரது மனைவியும், மாதர் சங்கம் மணப்பாறை நகரத் தலைவியுமான மனோன்மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 இடங்களிலும் கணவன், மனைவியை வேட்பாளர்களாக களம் இறக்கியிருப்பது அனைவரின் கவனத்தை பெற்றாலும், கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.