சனாதன சர்ச்சை வழக்கில் திருப்பம்.. அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன் : நீதிமன்றம் பரபர!!

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது தான் சனாதன தர்மம்.

இது சமூக நீதிக்கும், சமுத்துவத்துக்கும் எதிரானது. எனவே சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பெங்களூரு பெருநகர 42-வது மக்கள் பிரதிநிதிகளுக்கான கோர்ட்டில் சமூக ஆர்வலர் பரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று இரவு பெங்களூருக்கு சென்றார்.

இன்று காலையில் அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கான கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தி.மு.க. தரப்பு வக்கீல்கள் உடனிருந்தனர். மேலும் அவருடைய வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கி கர்நாடக மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

30 minutes ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

39 minutes ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

1 hour ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

2 hours ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

2 hours ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

2 hours ago

This website uses cookies.