உதயநிதி மகளுக்கு பேரவையில் வாழ்த்து.. மாண்பையே சிதைத்து விட்டார் சபாநாயகர் : ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!!

சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட சார்பில், வழக்கறிஞர் எம்.எம்.கோபி ஏற்பாட்டி அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

குறிப்பாக எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரலை கொடுக்காமல் இருப்பதாகவும், தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சியில் தான் என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.

நடுநிலையோடு செயல்பட வேண்டிய பேரவை தலைவர், பேரவை மாண்பையே சிதைக்கும் விதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து சொல்வதை கடந்து, பேரவை உறுப்பினர் உதயநிதியின் மகளுக்கு பேரவையில் வாழ்த்து சொல்வதன் மூலம் பேரவை தலைவரின் மாண்பை சிதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கிவிட்டு, அதிமுக உறுப்பினர்களுக்கு பாஸ் கேட்டால் அமித் ஷாவின் மகனிடம் கேட்க சொல்லும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு 3 மாடங்களின் டிக்கெட்டுகளை யாருக்காக புக் செய்து வைத்திருக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

திமுக ஆட்சியில் தான் விளையாட்டில் கூட அரசியல் கலந்திருப்பதாகவும் டி ஜெயக்குமார் விமர்சித்தார்.

நொச்சிக்கு குப்பத்தில் மீனவர்களுக்கு உரிய இடம் தராமல் மாநகராட்சி ஊழியர்களும், திமுக அரசும் நடந்து கொள்வது மீனவர்களின் பாதுகாப்பின்மையை காண்பிக்கிறது.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் பேச வாய்ப்பு மறுக்கும் பேரவை தலைவர் தந்தை மகன் புகழ் பாடுவதற்கு மட்டும் வாய்ப்பளித்து புகழ் பாடும் மன்றமாக சட்டப்பேரவையை மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

11 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

12 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

13 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

13 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

14 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

14 hours ago

This website uses cookies.