தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திரைப்படங்களில் நடித்து பிரபலமான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, அரசியலில் தீவிரம் காட்டி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் 14ந் தேதி உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில், ஏற்கனவே ஒரு முறை அமைச்சரவையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியமைத்தார்.
அதாவது, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், வரும் 14ந் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் இளைஞர் நலன், விளையாட்டு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை மூத்த அமைச்சரான கே.என். நேருவின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு விருப்பமில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினே நான்காவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் அமைச்சரானார்.
அப்போது அவருக்கு 30 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவம் இருந்தது. கட்சிக்கும் அவருக்கும் அது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது உதயநிதிக்கு அமைச்சர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் அது வாரிசு அரசியல் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்தனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.