தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திரைப்படங்களில் நடித்து பிரபலமான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, அரசியலில் தீவிரம் காட்டி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் 14ந் தேதி உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில், ஏற்கனவே ஒரு முறை அமைச்சரவையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியமைத்தார்.
அதாவது, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், வரும் 14ந் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் இளைஞர் நலன், விளையாட்டு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை மூத்த அமைச்சரான கே.என். நேருவின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு விருப்பமில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினே நான்காவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் அமைச்சரானார்.
அப்போது அவருக்கு 30 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவம் இருந்தது. கட்சிக்கும் அவருக்கும் அது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது உதயநிதிக்கு அமைச்சர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் அது வாரிசு அரசியல் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்தனர்.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.