சென்னை : சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராவார் என்பதை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சென்னை – சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கொய்யாத் தோப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் மக்களை அத்தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.
அப்போது, அமைச்சர் தா.மோ. அன்பரசன், விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்பதை சூசகமாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- கொய்யாத் தோப்பில் மட்டும் ரூ.52 கோடியே 20 லட்சம் மதிப்பில் 358 வீடுகள், 46 குடியிருப்புகள் வெறும் 18 மாதங்களில் கட்டித் தரப்படும். தற்போது நாம் செய்யும் பணிகளை பார்த்து அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பொய்யான தகவலை பரப்புகின்றனர்.
கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சொன்னதை செய்பவர்கள். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லிவிட்டார். எங்கு வீடுகள் இடிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இப்ப காலி செய்தால், 19வது மாதத்தில் உங்களுக்கான வீடுகளை எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வந்து உங்களிடம் வழங்குவார், எனக் கூறினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சின் மூலம் திமுகவின் 2வது ஆண்டு ஆட்சி நிறைவடைவதற்குள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்பது உறுதியாகியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.