திமுக ஆட்சியில் 4 வழிச்சாலை பணிகளில் சுணக்கம்… பணி செய்ய விடாமல் ஒப்பந்ததாரர்களுக்கு நெருக்கடி : மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் குற்றச்சாட்டு..!!

கன்னியாகுமரி : தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நான்கு வழிச்சாலை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணைய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டம் வந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நான்கு வழி சாலை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. போதுமான மண் மற்றும் கல் போன்றவை கிடைக்காததாலும், போதுமான ஒத்துழைப்பு கிடைக்காததாலும், இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் தொடர்கிறது.

குறிப்பாக ஒப்பந்ததாரர்கள் பணியை சரிவர மேற்கொள்ள முடியாத அளவிற்கு வெளிப்படையாக சொல்ல முடியாத சில நெருக்கடிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் அதிர்ஷ்டவசமாக தமிழக முதல்வர் நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை பாரதம் ஒன்றுபட்ட பாரதமாகவே இருக்கிறது. அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க போதுமான இடத்தை தமிழக அரசு ஒதுக்கினால், அது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.

ஏற்கனவே இந்தியா முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதில் 65 விமான நிலைய பணிகள் நடந்து வருகிறது. எனவே இதற்கு போதுமான ஒத்துழைப்பு மற்றும் இட வசதி கிடைத்தால் நிச்சயமாக இரண்டு ஆண்டுகளுக்குள் 100 விமான நிலையங்களும் இந்தியாவில் அமையும், என்று கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்ஆர் காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை தலைவர் தேவ், முன்னாள் நகர் மன்ற தலைவி மீனாதேவ், பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

17 minutes ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

17 minutes ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

49 minutes ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

2 hours ago

பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…

ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…

3 hours ago

தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த 6 பேர் அதிரடி கைது : வனத்துறை போட்ட ஸ்கெட்ச்!

கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…

4 hours ago

This website uses cookies.