ஜெயிலர்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார்.
அதோடு தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்ததோடு, பத்ரிநாத் கோவிலிலும் வழிபாடு செய்தார். அதன்பிறகு அவர் இமயமலை பயணத்தை முடித்து திரும்பினார்.
இந்த வேளையில் திடீரென்று அவர் ஜார்கண்ட் ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார்.
மேலும் ரஜினி காந்த் தொடர்ச்சியாக சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் இன்று அவர் திடீரென உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவுக்கு சென்றார்.
அங்கு ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்திடம் லக்னோ வருகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், முதல்வருடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்துவிட்டு சிரித்தபடி காரில் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பத்திரிகையாளரிடம் நடிகர் ரஜினி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்த் எதற்காக யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்கிறார்? இந்த சந்திப்பு என்பது திரைப்படத்துக்கானதா? இல்லாவிட்டால் பின்னணியில் அரசியல் சார்ந்த விஷயங்கள் உள்ளதா? நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளாரா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.