கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து உருவானது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த திமுகவில் இருந்து பிரிந்து வந்த வைகோ, மதிமுகவை உருவாக்கினார்.
கடவுளை மற, மனிதனை நினை என்று ஒவ்வொரு பெரியார் சிலையிலும், பொறிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வரும் ஒருவராகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திகழ்ந்து வருகிறார். இதனை நிரூபிக்கும் விதமாகவே அவரும் கறுப்பு துண்டு அணிந்தே தனது அரசியல் தோற்றத்தை வெளிக்காட்டி வருகிறார்.
இதனிடையே, இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசியலில் கடவுள் மறுப்பு கொள்கைக்கென்று தனியிடம் உண்டு என்றும், ஆனால், கடவுள் மறுப்பு கொள்கை மூலம் மக்களை அடைவது சிரமம் என்று கூறியுள்ள வைகோ, வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை கூறியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், கடவுள் கொள்கை மறுப்பில் இருந்து வைகோ விலகுகிறாரா..? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தோளில் கருப்பு துண்டு இல்லாமல் வைகோ சுவாமி கும்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சுவாமி கும்பிட்டு விபூதி வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில், வைரலாகும் வீடியோ குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
This website uses cookies.