டிரெண்டிங்

தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!

தமிழிசை குறித்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை வைத்த திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், நான் மது குடித்தது கிடையாது, ஆனால் தன் மீது விமர்சனம் செய்த தமிழிசையும் என்னை போலவே குடிக்க மாட்டார் என நம்புகிறேன் என கூறினார்.

இதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், திருமாவளவன் கீழ்தரமான கருத்தை சொல்லுவார் என கனவிலும் நினைத்ததில்லை என கூறியிருந்தார்.

திருமாவளவன் பேச்சு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பொது வாழ்வில் இருக்கும் ஒரு பெண் அரசியல் தலைவரின் மீது, “அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன்” என்ற தரம்தாழ்ந்த விமர்சனத்தை அதுவும் ஒரு பொது மேடையில் நீங்கள் வைத்திருப்பது மிக வருத்ததிற்குறியது திரு. திருமாவளவன் அவர்களே,

“மது ஒழிப்பு என்பதே காந்தியக் கொள்கைதான், ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்தும் விசிக தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள், நமது மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தாமல் சென்றது ஏன்? ஒருவேளை தங்களின் கொள்கைக்கு எதிராக மது ஒழிப்பை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற தோல்வியை ஒப்புக் கொண்டு, குற்ற உணர்வில் சென்று விட்டாரா?” என்று தான் பாஜக-வின் தலைவர் திருமதி.தமிழிசை அவர்கள் கூறினாறே தவிர, உங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எவ்வித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால், அதை சரிவர புரிந்து கொள்ளாமல், ஒரு பெண் மருத்துவர், மூத்த அரசியல் தலைவர், முன்னாள் மாநில ஆளுநர் போன்ற பல உயர் பெருமைமிக்க பதவிகளை வகித்த ஒரு பெண் தலைவர் மீது, இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதலை நீங்கள் நிகழ்த்துவீர்கள் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறான உங்களின் மாண்பற்ற விமர்சனங்கள் கடும் கண்டனத்திற்குறியது.

எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்விற்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் நீங்கள், ஒரு பெண் தலைவரைப் பற்றி நீங்கள் கூறிய அநாகரீகமாக கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

4 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

13 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

38 minutes ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

48 minutes ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago

This website uses cookies.