குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் திமுக அரசு : வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அதில் அவர் பேசும் போது, 48 கோடி மக்களுக்கும் மேலாக முதல்முறையாக பாஜக ஆட்சியில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் உரிமை என்றாலும் அதை ஏழைகளுக்கு சென்றடைய வங்கி கணக்குகள் செயல்படுகிறது.

முத்ரா வங்கி திட்டத்தில் 68 சதவீதம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர்.
இந்திய நாட்டுப் பெண்களுக்கு இரத்த சோகை அதிகம். சத்து குறைபாடு காரணமாக அதிகமாக பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

கர்ப்பிணி கால பராமரிப்பு, பாலூட்டும் நிலை, இளம் சிறார்களுக்கு சுகாதார திட்டங்கள் ஆகியவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சாலையோர வியாபாரிகளுக்கு உதவி செய்ததின் வாயிலாக மீண்டும் தொழில் செய்ய உதவி கொடுத்துள்ளோம். ஏழு குறைபாடுகள் இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்பதை 21 குறைபாடுகளாக வகைப்படுத்தி உள்ளது மத்திய அரசு. 25 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்.

1400 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் ஆன்லைன் திட்டத்தில் விற்பனை செய்ய மாநில அரசாங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியிருந்தேன் அவர்கள் முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.

23 கோடி மண்வள அட்டைகள் வழங்கியதின் வாயிலாக விவசாயிகள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது.புதிய கல்விக் கொள்கையில் இளைஞர்களுக்கு மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம்.இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கு வேண்டி தனி இலாக்காவை உருவாக்கியது மத்திய அரசு.கிராமப்புறம் நகர்ப்புறம் வீடுகள் என 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் சிறப்பாக உலக அளவில் செயல்பட்டதற்கான நாட்டில் இந்தியாவிற்கு பெருமை கிடைத்தது. வெளிநாடுகளில் மாட்டி தவித்த இந்தியர்களுக்கு ஆபரேஷன் கங்கா, காவேரி போன்ற திட்டத்தின் மூலம் அழைத்து வந்தது.

எந்த நாடுகளாலும் கையாள முடியாததை இந்தியா வெளியுறவு துறை கொள்கை மூலம் கையாண்டுள்ளது.ஐந்தாவது பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடாக இந்தியா விளங்கி கொண்டுள்ளது.இதற்கு காரணம் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சனைகள் மாறி உள்ளது.டிஜிட்டல் பரிவர்த்தனை எளிமையாக உள்ளது.உலக அளவில் இந்தியாவில் 40% டிஜிட்டல் பயன்பாடு உள்ளது. ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவ உள்கட்ட அமைப்பு வசதி மற்றும் 23 எய்ம்ஸ் ஆக அதிகரித்துள்ளது.

ஒன்பது வருட கால ஆட்சி நிறைவு என்பது இந்தியாவைப் பற்றிய பார்வை பிரதமருக்கு உலக அளவில் கிடைத்துள்ள பெருமை.ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியது. ரயில்வே துறையில் மாற்றங்கள் என்பதை கண்களால் பார்த்து வருகிறீர்கள்.பிரதமர் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை முதலில் செயல்படுத்த தெரிவித்தார். பாதுகாப்பான ரயில் பயணத்தை செயல்படுத்த மத்திய அரசு செயல்பட்டது.

குறிப்பிட்ட சம்பவம், துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக ரயில்வே அமைச்சகத்தை மறந்து விட முடியாது.இந்த விவகாரத்தில் எதையும் காப்பாற்ற விரும்பவில்லை மூடி மறைக்க விரும்பவில்லை. யார் தவறு செய்திருந்தாலும் காப்பாற்ற நினைக்காது.

கர்நாடகா வெற்றியை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி பாஜகவை வீழ்த்த விடலாம் என்றால் அந்த கனவு பலிக்காது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து பேசுவது நாட்டின் மரியாதைக்கு எதிரானது.

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் திமுக தமிழகத்தின் நலனை காப்பாற்ற போகிறார்களா என்பதை வரக்கூடிய காலத்தில் பார்ப்போம். தமிழகத்திற்கு அதிக முதலீடு வந்தால் பாஜக ஆதரிக்கும். ஆனால் துபாய் சென்று விட்டு சொன்ன முதலீடுகள் இதுவரை எந்த தகவலும் இல்லை. விளம்பர பலகைகள் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

புதிதாக திமுக ஆட்சி வந்த பிறகு விளம்பரப் பலகைகள் அதிகரித்து வருகிறது. விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதும் உள்ளது. விளம்பர பலகை விவகாரத்தில் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதாக உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

11 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

12 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

13 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

13 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

14 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

15 hours ago

This website uses cookies.