பட்டா பதிவேற்றம்,. 20 ஆயிரம் லஞ்சம்; VAO கைது; காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி,..

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் . இவருடைய மனைவி தமிழரசி.

இவர்களுக்கு அரசு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கியது. அதை கிராம கணக்கில் ஏற்ற திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அணுகியுள்ளார்.

இதற்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கருணாகரன் லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக 15,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அளிக்க உறுதி செய்யப்பட்டடது.

இந்நிலையில் லஞ்சம் தர குமரவேலுக்கு மனம் இல்லாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் இன்று திருமுக்கூடல் சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் அருகே 15,000 பணத்துடன் குமரவேலை வருமாறு கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் அழைத்துள்ளார்.

அருங்குன்றம் பகுதியில் வைத்து கருணாகரன் பணம் பெற்ற போது, அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் அவரை கைது செய்து திருமுக்கூடல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sudha

Recent Posts

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

8 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

28 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

37 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

1 hour ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago

This website uses cookies.