தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்திட வலியுறுத்துவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேற்குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலர், தான் முன்பு பணியாற்றிய இடங்களாயினும், தற்பொழுது பணியாற்றக்கூடிய இடமாயினும் மணல் – கனிம வளம் உள்ளிட்ட அரசு சொத்துக்களைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி பணியாற்றி அனைவராலும் பாராட்டப்பட்டவர். அவர் தான் பணியாற்றி வந்த முறப்பநாடு எல்லைக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மணல் கொள்ளையர்கள் இப்பொழுது அவரையே வெட்டிச் சாய்த்து இருக்கிறார்கள்.
லூர்து பிரான்சிஸ் அவருடைய குடும்பத்தாருக்கு 1 கோடி நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். அதே வேளையில் இந்த நட்ட ஈடு மட்டுமே தீர்வாகாது. அவரது கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து, வழக்கை விரைந்து முடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதும்; தமிழகத்தில் இதுபோன்ற மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளைகளை அறவே தடுத்து நிறுத்துவதும் தான் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களுக்குச் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதை ஆகும்.
தமிழகத்தில் பரவலாக கனிமவள பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடக்கூடிய வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் இது போன்று நடந்த சம்பவங்கள் பல உண்டு. மேலும், தாமிரபரணி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்திட வலியுறுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.