தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர்.
இவர் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி அழகிரி நகர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர். இவர் நேற்று இரவு 01-05-2023 அன்று இரவு மெனசி பகுதியில் கனிம வள கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த நேரத்திலும் தனது கடமையை நேர்மையுடன் செயல்படுத்த
மழை பெய்து கொண்டிருந்த போதும் கனிவள கொள்ளை கும்பலை கையும் களவுமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் விரைந்தார் .
அப்போது குண்டலமடுவு காளியம்மன் கோவில் அருகே உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது. அவற்றை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொல்லும் வகையில் வேகமாகச் சென்றது. அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி தப்பித்துள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சியும் பயமும் கொண்ட கிராம நிர்வாக அதிகாரி இந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்ததில் மெணசி பகுதியை சார்ந்த ராகவன் என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நபர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கனிம வள கொள்ளைகளை திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் கிராம நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த கும்பலுக்கு அப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் உதவியாக இருப்பதாகவும்,இந்த கும்பலிடம் இருந்து தற்போது கிராம நிர்வாக அதிகாரிக்கு மிரட்டல்கள் வர துவங்கியுள்ளது.
இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து
காவல் துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நேர்மையாக திறமையாகவும் கனிம வள கொள்ளைக்கு இடையூறாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரிகளை தேடி பிடித்து கனிம வள கொள்ளை கும்பல் கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்து கனிம வளம் அதிகம் உள்ள தருமபுரி மாவட்டத்திலும் கொலை முயற்சிகள் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.