அதிமுகவிற்கு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கு வாக்களித்ததாக தான் பொருள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கினார் தொல்.திருமாவளவன். அப்போது? அவர் பேசியதாவது :- இந்த நாடாளுமன்ற தேர்தலில் வழக்கமான தேர்தல் அல்ல. சங் பரிவார் அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான போர்.
மேலும் படிக்க: நானும் தான் குடிப்பேன்… ஒரு டாஸ்மாக்கை மூட நாங்க அரசியலுக்கு வரல ; அண்ணாமலை பரபர பேச்சு!!
அதிமுக அணி வேறு. பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் ஒன்றாக இருந்தபோதே வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து நின்று வெற்றி பெறமுடியாது என்று அவர்களே தெரியும். அதிமுக-வும், பாஜக-வும் அரசியல் நாடகம் ஆடுகின்றனர்.
மேலும் படிக்க: அடித்தட்டு மக்களுக்கான கட்சி அதிமுக… கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் பிரச்சாரம்…!!
மக்கள் விரோத சட்டங்களான வேளாண் மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் அமலாக முக்கிய காரணம் அதிமுக-பாமக கட்சிகள். இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் தான் என்று பேசியவர் நரேந்திர மோடி. இன்றைய பாஜக சிறுபான்மையினருக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி- அவர்களுடன் இணைந்துள்ளனர் பாமக.
சமூக நீதியை பாதுகாக்கவே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக-வுடனான கூட்டணியை நெருக்கடிகள் வந்தாலும் தொடர்ந்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் கூட அதிமுகவினர் பாஜகவை விமர்ச்சிக்க மாட்டார்கள். திமுக வினரைத் தான் விமர்சனம் செய்வார்கள். தேர்தலில் கூட பாஜக வை விமர்ச்சிக்காதவர்கள் அதிமுக என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த பிரச்சாரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உடனிருந்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.