மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
மதுரை மேலவளவில் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நான் எத்தனையோ திருமணம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு திருமண ஆசை இருக்காதா..? நான் என்ன நொண்டியா..? முடமா என்று பேசியுள்ளார்.
அவரது இந்தப் பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் விதமாக, திருமாவளவனின் பேச்சு உள்ளதாகக் கூறி அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜம் ஜம் அஷ்ரப் என்பவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் காணொளியில் அஷ்ரப் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண ஆசை வரக்கூடாதா..? சமூக நீதி பேச்சாளராக உள்ள நீங்கள் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில், இப்படி பேசலாமா..? தாங்கள் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை தங்களுக்கு எதிராக நடத்த வேண்டி இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.