ஆளுநர் பதவியில் இருந்து ஆர்என் ரவியை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திராவிட கழக முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி டி ஆர் பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவிடம் போட்டியிட விரும்பும் விருப்ப பட்டியலை கொடுத்துள்ளோம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளன. நான்கு தொகுதிகளை போட்டியிட கேட்டுள்ளோம். அகில இந்திய அளவில் தொடர்ந்து திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக தேர்தல்களை சந்தித்துள்ளது. அவ்வாறு கொள்கை சார்ந்து இயங்கும் கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. மேலும் இது இந்திய கூட்டணியாக வலுவடைந்துள்ளது.
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்துடன் இந்தியா கூட்டணி இயங்கி வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வைக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு தனி தொகுதிகளை குறிப்பிட்டு அதில் மூன்று தொகுதிகள் வேண்டும் என்றும், பொது தொகுதிகளில் பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய பொதுத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்று வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
தொகுதி இறுதி செய்த பின்னர் போட்டியிடும் சின்னம் குறித்து அறிவிக்கப்படும். சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட முறை வேதனை அளிக்கிறது. அரசிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற முன் சிந்தனையோடு ஆளுநர் வந்துள்ளார்.
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் ஆளுநராக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் ஆளுநர் பதவியில் நீடிக்க கூடாது. அவரை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சி வேண்டுகோள் விடுகிறது, என தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.