டிரெண்டிங்

வீண் விளம்பரம் செய்யும் விசிக எம்பி…எப்போதுமே எம்ஜி ஆர் தான் G.O.A.T : ஜெயக்குமார் தடாலடி!

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுகவளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை எதிர்பார்க்காமல், தமிழக அரசு தேவையான நிதியை செலவழித்து விட்டு பின்னர் மத்திய அரசிடம் நிதியை பெற்றுக் கொள்வது தான் சிறந்த நிர்வாகமாக இருக்க முடியும்.

ஆனால் மத்திய அரசை குறை சொல்லி நிதி இல்லை என்று சொல்லுவது ஏற்புடையது இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று வெளியாக உள்ள விஜயின் போர்ட் திரைப்படம் 2000 ரூபாய் வரையில் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த முடியாமல் தவறி இருப்பது அவர்களது இயலாமையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் தந்தையின் புகழை பாடுவதற்கு நிதியை செலவழிக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு நிதி ஆதாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பை கல்லூரிகளுக்கு சென்று படிக்காமலேயே பட்டம் பெரும் நிலையை விடியா திமுக ஆட்சியில் உருவாகி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக வெளி மாநில மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும், தமிழக மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் பெற்றுக்கொண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்புக்கான சான்றிதழை பெரும் நிலை தமிழக அரசின் உருவாகி இருப்பதாகவும், இவற்றை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக கார்ப்பரேட் அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட வைத்த திமுக அரசுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு அருகதையே இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார் .

அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படுகிறார், இல்லை உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார் என்பதே தெரியாமல் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோட் திரைப்படம் எந்த வகையில் சனாதனத்தை பிரதிபலிக்கிறது என்பதை விசிக எம்.பி. ரவிக்குமார் விளக்க வேண்டும். The Greatest of all time என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்… அதனால் வீண் விளம்பரத்திற்காக ரவிக்குமார் பதிவிடாமல் எதற்காக இதை பதிவிட்டார் என்பதை விளக்கினால் நாங்கள் பதில் அளிக்க தயார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்

5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…

1 hour ago

திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…

1 hour ago

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

2 hours ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

3 hours ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

3 hours ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

4 hours ago

This website uses cookies.