வெயில் வாட்டி வதைத்து வரும் வேலூரில் நேற்று திடீரென வீசிய புயல் காற்று அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், வேலூரிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த சூழலில், நேற்று பிற்பகலில் வழக்கத்திற்கு மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, குளிர்ந்த காற்றுடன் லேசான மழை தொடங்கியது. பின்னர், படிப்படியாக சூறைக்காற்று வீசியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கூரைகளே பறந்து போகும் அளவுக்கு பலத்த காற்று வீசியது.
வேலூர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வள்ளலார் பெருமுகை, வசூர், பிள்ளையார் குப்பம் கொணவட்டம், காட்பாடி பிரம்மபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பல்வேறு இடங்களில் புயல் காற்றுக்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால், வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.
குறிப்பாக, VIT கல்லூரியில் இரும்பு மேசைகள் பறந்தன. மாணவர்களே நிலைகுலைந்து போகும் அளவுக்கு காற்று வீசியதால் அனைவரும் பீதியடைந்தனர். வேலூரில் வீசிய சூறைக்காற்றின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.