வேலூர் ; ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு தான், திமுகவுக்கு அல்ல என்றும், அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வேலூர் காட்பாடியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- மத்திய அரசு மதுரையில் கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனையை திமுக தடுக்கவில்லை அதை மத்திய அரசு செயல்படுத்தாமல் விட்டுவிட்டது. திமுக அரசு மீது பழி சொல்வது நியாம் அல்ல.
பா.ஜ.க, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களை போட்டு வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் ” ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு, திமுக வுக்கு அல்ல. அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டது. கோள் ஊன்றிதான் நடப்பார்கள். அதிமுக தலைவர்களின் படங்களை பா.ஜ.க மிஸ்யூஸ் பண்ணுகிறது என்றால் அதற்கு அதிமுக தான் கோவப்படவேண்டும் திமுக அல்ல, என்றார்.
பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறாரே என்ற கேள்விக்கு, ” தேர்தல் சமயத்தில் வரத்தான் செய்வார்கள். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டிமாடுகள் கூட தலையாட்டும், அது அப்படித்தான், என்றார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.