33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.1000 கோடி நிலம் மீட்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

33 ஆண்டு சட்டப்போராட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சென்னையில் முக்கிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சென்னை, செம்மொழி பூங்கவுக்கு எதிரே உள்ள மதிப்பு வாய்ந்த 115 ஏக்கர் கிரவுண்ட் நிலத்தை அரசு கைப்பற்றியுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையின் இருபுறமும் தோட்டக்கலைக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளன. அரசு நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சட்ட முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

1989-ல் அரசின் கட்டுப்பாட்டில் நிலத்தை கொண்டுவர அப்போதைய முதலமைச்சர் கலைஞர் முயற்சிகளை மேற்கொண்டார்.தோட்டக்கலைத்துறை நிலத்தை பெற 1989ல் கலைஞர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்தது. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தோட்டக்கலைத்துறை நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கை தொடர முடிவு செய்யப்பட்டது.

அரசின் முடிவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2007-ல் தள்ளுபடியானது. திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை 2008ல் அனுமதித்து உத்தரவிடப்பட்டது. திமுக அரசின் ஆணையை ரத்து செய்து 1998-ல் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தோட்டக்கலை நிலத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கல ஆணை வழங்கியது. இந்த உத்தரவை அடுத்து, தோட்டக்கலைத்துறை நிலத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்த நிலத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர நில நிர்வாக ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை 2022-ல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் தன்வசம் கொண்டுவந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொடர் முயற்சியால் வெற்றி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் இதற்கு பாடுபட்ட வருவாய்த்துறை, சட்டத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

What Bro.. Why Bro? சரத்குமார் கடும் தாக்கு! தொடரும் நடிகர்களின் விமர்சனம்?

சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…

1 hour ago

படப்பிடிப்பில் ‘அந்த’ நடிகை வந்தா தனுஷ் வாயை பிளந்துட்டு போவான்.. ராதிகா சொன்னது யாருனு பாருங்க!

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…

1 hour ago

75 நிமிட விசாரணை.. 63 கேள்விகள்.. சீமான் கேட்ட ஒரே கேள்வி!

நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…

2 hours ago

அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி? எந்த படம்னு தெரியுமா!

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…

2 hours ago

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

4 hours ago

This website uses cookies.