டிரெண்டிங்

விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!

தவெக மாநாட்டுத் திடலுக்குள் அக்கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, தவெக கொடி மற்றும் கட்சிப் பாடலையில் நிர்வாகிகள் முன்னிலையில் அவர் வெளியிட்டார். இந்த நிலையில் தான் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரத்தில் தவெக மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு நடைபெறுகிற மாநாட்டிற்காக பிரமாண்ட திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 80க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் திடல் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த மாநாட்டுத் திடல் அமைக்கும் இடத்தில் உள்ள கிணறு மரப்பலகைகளால் மிகவும் பாதுகாப்ப்பாக மூடப்பட்டுள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய் உள்பட முக்கிய நிர்வாகிகள் அமரும் வகையில் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், மேடையில் இருந்தவாறு தொலைதூரம் இருக்கும் தொண்டர்களைச் சந்திக்கும் வகையில் ரேம்ப் வாக் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேம்ப் வாக் மேடையில் விஜய் சென்று, தொண்டர்களுக்கு கை காட்டி, கை குலுக்கிவிட்டு வருவார் என்றும், நடந்து கொண்டே பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அங்கு சுமார் 100 அடி கொடிக்கம்பம் ஒன்று அமைக்கும் திடலும் அமைக்கப்பட்டு வருகிறது.

Maanaadu place

இவ்வாறு கொடிக்கம்பத்திற்கு வரும் விஜய், அங்கு தொண்டர்கள் சூழ தவெக கொடியை ஏற்றி வைத்துவிட்டு, பின்னர் ரேம்ப் வாக் மேடை வழியே பிரதான மேடைக்கு அவர் செல்ல உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டிருந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. இருப்பினும், அங்கு தொடர்ந்து மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 70 சதவீத மாநாட்டுப் பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், திடலைச் சுற்றிலும் இரும்பு கேட்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தவெக மற்ற நிர்வாகிகளை மாநாட்டுத் திடலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும், நேரடியாக மாநாடு நடைபெறும் அன்றே வர வேண்டும் எனவும் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ரகசிய சந்திப்பால் கர்ப்பமான பிரபல நடிகை.. அரசியல் வாரிசு அழுத்தத்தால் கருக்கலைப்பு!

அது மட்டுமின்றி, மாநாட்டுத் திடலுக்கு அடுத்துள்ள விளைநிலங்களுக்குச் செல்ல முடியவில்லை என அப்பகுதி விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கு ஆய்வு செய்த விக்கிரவாண்டி வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கு போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், தவெக மாநாட்டுக்கு அனைவரும் ஆயத்தமாகும்படி விஜய் தொண்டர்களுக்கு இருமுறை கடிதம் எழுதியிருந்தார்.

Hariharasudhan R

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

7 hours ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

8 hours ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

9 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

10 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

11 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

11 hours ago

This website uses cookies.