இரவோடு இரவாக விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.. நள்ளிரவில் நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். ஏழை மக்களுக்கு வாரி வழங்கும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார்.
அரசியலில் நுழைந்து தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து, வந்த வேகத்திலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார். இந்த நிலையில் அவ்வப்போது அவருக்கு மருத்துமவனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்றார்.
பின்னர் பூரண குணமடைந்த பிறகு கடந்த டிசம்பர் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில் டிசம்பர் 14ல் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.