விருதுநகர் : விருதுநகரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்தில் நீதி வேண்டி பாஜக நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விருதுநகர் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி என்னும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்து துன்புறுத்தியதால் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குற்றமற்றவர் என்று காவல்துறையினர் விடுதலை செய்த பின்னும், ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக மீண்டும் சகோதரர் தங்கப்பாண்டியை காவல்துறை கைது செய்ததாக தெரிகிறது.
இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சகோதரர் தங்கப்பாண்டி இறப்புக்கு காரணமான அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுத்தர திமுக ௮ரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சகோதரர் தங்கப்பாண்டியனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 25 லட்ச ரூபாய் இழப்பீடாகவும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கை.
காவல்துறையினரின் தொடர் அத்துமீறலுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக சகோதரர் தங்கப்பாண்டியின் இறப்புக்கு நீதி கேட்டு, மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து,
நாளை தமிழக பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.