என் உயிருக்கு ஆபத்து.. பிரபல தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் தம்பி : பரபர புகார்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே ஆவின் சங்கத்தில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா.

இது மட்டுமல்ல முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீது ஏராளமான புகார்கள் உள்ளன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் கட்சியில் இணைந்தார்.

ஆனால் தொடர்ந்து நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல புகார்கள் ஓ.ராஜா மீது உள்ளது. இந்தநிலையில் மீண்டும் ஒரு கொலை மிரட்டல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஓ.ராஜா மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் தொழில் செய்வதற்காக முன்னாள் பெரியகுளம் நகர் மன்றத் தலைவரும், தற்போதைய தேனி மாவட்ட ஆவின்பால் தலைவருமான ஓ.ராஜாவிடம் 4 கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக என் பெயரிலும், என் மனைவி பெயரிலும் உள்ள தென்னந்தோப்பு அசல் பத்திரங்களையும், வாங்கி வைத்துக் கொண்டார். இதனையடுத்து ஓ.ராஜா பணம் திருப்பி கேட்டதையடுத்து முதல் கட்டமாக கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு கோடியே 98 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்தேன்.

பின்னர் கொரோனா பாதிப்பின் காரணமாக மீதி பணத்தை திரும்ப கொடுக்கமுடியவில்லை. இதனால் 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்னிடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டார்.

ஆனால் அடுத்தடுத்து பல முறை 3 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளேன். ஓ.ராஜாவிடம் நான் வாங்கியது 4 கோடி மட்டும் ஆனால் நான் இதுவரை ஓ.ராஜாவிற்கு 5 கோடியே மூன்று லட்சம் வரை கொடுத்து விட்டேன்.

இந்நிலையில் ஓ.ராஜா அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து எனக்கு மேற்கொண்டு 2 கோடியே இருபத்தி ஐந்து லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்காவிட்டால் உன்னையும் உன் மனைவியையும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி விட்டுச் சென்றார்.

தொடர்ந்து எனது பத்திரம் எழுதும் அலுவலகத்திற்கு அடியாட்களோடு வந்து ஆபாச வார்த்தைகளால் பேசியும் மிரட்டியும் சென்றுள்ளார். எனவே ஓ.ராஜாவால் எனது உயிருக்கும். எனது குடும்பத்தினர் உயிருக்கும். எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று எனக்கு மிகவும் பயமாக உள்ளது. அப்படி எனது உயிருக்கும், எனது குடும்பத்தினர் உயிருக்கும் அவராலும் அல்லது மற்ற நபர்களாலும் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு முழுக் காரணம் ஓ.ராஜா தான் என தெரிவித்துள்ளார்.

எனவே ஓ.ராஜா-விடமிருந்து எனது உயிரையும், எனது குடும்பத்தார்கள் உயிரையும், எங்களது உடைமைகளையும், காப்பாற்றிக் கொடுக்கும்படி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இரண்டு தரப்பையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

4 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

7 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.