ஆந்திரா : ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிக்க தேவையான 300 ரூபாய் டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இன்று காலை 9 மணிக்கு நாளொன்றிற்கு 12,000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகளை பக்தர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் பிப்ரவரி மாதம் முழுவதற்குமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடப்படும்.
டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்யலாம்.
இந்த நிலையில் அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பின் திருப்பதியில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.