மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேனூரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பகுதி நேர கடையை திறந்து விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதில், துணை மேயர் சுனில் குமார் ,கூட்டுறவு இணை இயக்குநர் குண ஐயப்பதுரை, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது :- மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை வாரியம் ஆணையத்தின் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆணையத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. இது தவறானது.
ஏற்கனவே பலமுறை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை என ஆணையம் கூறியது. ஆனால், தற்போது தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுவது கண்டிக்கதக்கது. இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். மேலும் இதில் மத்திய அரசின் ஆதரவில்லாமல் இவர்கள் பேசமாட்டார்கள். இதில், மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளது இதுகுறித்து ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை.
eஇதுகுறித்து விவாதித்தால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யபட வேண்டும் என்பது மாறுபட்ட கருத்தல்ல. அதனை தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். தமிழக முழுவதும் அங்கன்வாடியில் செயல்பட்ட எல்கேஜி, யுகேஜி மூடியது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் போன்றவற்றில் நீர் வளத்துறை மூலம் கணக்கீடு செய்கிறோம். நீர்நிலைகள் குறித்து முழுமையான கணக்கீடு வந்தால் அது நமக்கு பயனுள்ளதாக அமையும். நானோ, அமைச்சரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ அரசு நிலங்களை ஆக்கிரமித்திருந்தாலும், அதனை அகற்றுவோம், என்று கூறினார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.