இந்து கோவில்களை தொட்டால் அனைத்து ஆயுதங்களையும் எடுப்போம் : பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஹெச் ராஜா!!

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 1979ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நீதிபதி சந்திர சூட் தலைமையில் 5 நீதிபதி கொண்ட அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால் ஆளுநருக்கு இணையான நிர்வாகியாக கூட முதல்வர் இருக்க முடியாது. ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாக அதிகாரம் படைத்தவர் முதல்வர் அல்ல. ஆளுநர் தான் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன் முடி, கே.என்.நேரு ஆகியோர் மீது ED வழக்கு உள்ளது. ஒவ்வொருத்தராக அனுப்பாலம் இல்லையென்றால் மொத்தமாக அனைவரையும் அனுப்பலாம். ஆனால் அதை செய்யவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்பது எனது கனிப்பு.

அரசியில் சாசன படி ஆளுநர் சரியாக தான் செயல்படுகிறார். பீகாரியைக் முட்டாள் என்று சொன்னால் ஸ்டாலின் பீகாருக்கு வர கூடாது என்று சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி வெட்கமே இல்லாமல் பீகாருக்கு சென்று வந்தார் ஸ்டாலின் இன்றும் அதேபோல் அந்த பீகார் கூட்டத்தில் ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார் என்று பிரஷாந்த் கிஷோர் சொல்லியிருக்கிறார். இது கண்டிதக்கது.

ஒரு மாநிலத்தையே பிரஷாந்த் கிஷோர் இழிவு செய்துள்ளார். உங்களுக்காக பேசுவது போல் விபரம் தெரியாமல் பேசும் தீய சக்திகளையும், ஆளுநர் பற்றி ஏதும் தெரியாமல் விவாதம் செய்யும் சில யூடியூபர்கள் பேசுபவதையும் ஸ்டாலின் நம்பக்கூடாது. அவர்களை அடக்கி வைக்க வேண்டும். உங்களுக்காக கொம்பு சீவி விட்டு பேசி, உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

கோவில் விஷயத்தில் சேகர் பாபு விளையாடக்கூடாது. குறிப்பாக சிதம்பரம் கோவிலை கட்டியது தீட்சியர்கள் தான். எனவே கோவிலை கட்டியது மன்னர்கள் என்று ஈ.வெ.ரா.வை பின்பற்றும் முட்டாள்கள் சொல்கின்றனர். இந்து மதத்தை மொட்டியடிக்க இந்த இந்து விரோத அரசு செயல்படுகிறது. கோவில் விஷயத்தில் சேகர்பாபு விளையாடக்கூடாது. கோவில் சொத்தை தொட்டால் குடி அழியும். இதுவே சேகர்பாபுவுக்கு இறுதி எச்சரிக்கை.

சிதம்பரம் நடஜாரை தொட்டால் அவ்வளது தான். அமைச்சர் சேகர்பாபு சிவனிடம் விளையாட வேண்டாம். நடராஜரைக் அளித்தால் அது நடக்காது. மேலும் கோவில் மாடுகளை எல்லாம் கேரளாவுக்கு வெட்டுக்கு அனுப்புவதாக தகவல் வருகிறது. இந்து கோவில்களைக் தொட்டால் பாஜக தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

11 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

12 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

12 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

13 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

13 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

13 hours ago

This website uses cookies.