செந்தில்பாலாஜிக்கு சிறையில் என்னாச்சு? முதலில் ஸ்டான்லி… பின்னர் ஓமந்தூரார் : அவசர அவசரமாக மருத்துவமனை மாற்றம்!!!
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று ( 15 ம் தேதி) மதியம் உணவு உட்கொண்ட போது வாந்தி, எடுத்ததாகவும் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனைக்குள் வீல் சேர் மூலம் அழைத்து செல்லப்பட்டார். நாளை மாலை வரை மருத்துவ சிகிச்சையில் இருப்பார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்குஒரு மணிநேரம் வரையில் இசிஜி , எக்ஸ்ரே , ரத்தப்பரிசோதனை போன்றவை சோதனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இருதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதயம் மற்றும் கழுத்து வலிப்பதாக அவர் கூறிய நிலையில் அந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.