மரத்துக்கு கிளைகள் இருக்கும் போது… இந்து மதத்திற்கும் இருக்கக்கூடாதா? பாரதியாரை சுட்டிக்காடிய பாஜக!!!

மரத்துக்கும் மட்டும் கிளைகள் இருக்கும் போது… இந்து மதத்திற்கும் இருக்கக்கூடாதா? பாரதியாரை சுட்டிக்காடிய பாஜக!!!

சனாதன தர்மம் தொடர்பான விவாதங்கள் தற்போது ஓய்ந்து இருக்கும் நிலையில், பாரதியார் 1909 ஆம் ஆண்டில் சனாதனம் குறித்து எழுதியதாக ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், “சனாதன தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும், கிளைகளும் சூரிய ஜோதியிலே காணப்படும் ஏழுவகை வர்ணங்களைப்போல அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களாகுமேயல்லாமல், குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமது அழிவுக்கு கருவிகளாக மாட்டா.

அடடா! இந்த ஹிந்துக்களிலே வைஷ்ணவன், சைவன், அத்துவைதி, சாக்தன் முதலிய எத்தனை கிளைகள்! இவர்கள் எப்படி விளங்கப் போகிறார்கள்? என்று கூறி சிரிப்பவர்கள் நமது தேச சரித்திர மட்டுமேயன்றி வேறெந்த நாட்டு சரித்திரமும் அறியாதவர்கள். இவர்கள் சனாதன தர்மத்தின் இயல்பை மட்டுமேயன்றி வேறெந்த மதத்தின் இயல்பையும் அறியாதவர்கள்.

மனித அறிவானால் ஆச்ரயிக்கப்பட்டுவரும் எந்த மார்க்கத்திலும் ஆயிரக்கணக்கான கிளைகள் இருத்தல் அத்யாவசியம் என்ற சாதாரண உண்மை இந்த குழந்தைகளுக்கு தெரியாது. உயிர்த்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல கிளையுடைமை ஒரு லட்சணம்.

உயிரடனிருக்கும் ஒரு மனிதனுக்குப் பலவகைப்பட்ட அவயவங்கள் இருந்து பலவகைத் தொழில்கள் நடத்துவதை பார்த்து இக்குழந்தைகள் யோசனை செய்யவில்லை. உயிருடன் இருக்கும் ஒரு மரத்திற்குப் பல மலர்களும், கிளைகளும், கொம்புகளும் இருப்பதைக் கண்டு இவர்கள் சிந்தனை செய்தது கிடையாது.

வெட்டுண்டு கிடக்கும் செத்த மரக்கட்டை தான் எப்போதும் ஒரே ரூபமுள்ளதாய், பல கிளைகளற்றதாய் இருக்கும். அந்த மரக்கட்டை போல நமது பாரத ஜாதியும், சனாதன தர்மம் ஆகி விடவில்லையென்று விசனமடைவோரைப் பார்க்கும் போது, சங்கீத வித்வானைப் பார்த்து அழத் தொடங்கிய ஆட்டிடையன் கதை ஞாபகத்திற்கு வருகின்றது.

பௌத்தம், கிருஸ்துவம் முதலிய யாதேனும் ஓர் மார்கத்தைப் பற்றிய பழக்கம் இருந்தால் இவர்கள் நமது சனாதன தர்மத்தில் கிளைகள் இருப்பது பற்றி குறை சொல்ல வரமாட்டார்கள். ஐயோ! சனாதன கர்பத்திலே பல வகுப்புகள் இருப்பதாகச் சொல்லி நிந்தனை செய்ய வரும் இவர்கள், அந்த வகுப்புகளின் யதார்த்த ரூபத்தையும், குணத்தையும், தொழிலையும் பற்றி ஒரு க்ஷணமேனும் ஆலோசனை செய்திருக்கிறார்களா?

சக்தி மார்க்கம், கிருஷ்ண பத்தி, சிவயோகம், பிரம்மானுபவம் என்பனவற்றில் எதைக் கொய்தெறிந்து விடலாமென்று இவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்? அழகிய ஜீவ விருக்ஷத்திலே பசுமை வாய்ந்த இலைகளையா? இனிய தோற்றமுடைய நறுமலர்களையா? கனிகளையா? எந்த பகுதியை நாசம் செய்ய சொல்லுகிறார்கள்? சனாதன தர்மம் ஒன்று. பரஸ்பர சஹோதரத்துவமுடைய பல கிளைகள் கொண்ட ஒரு பொருள்.
நம்முள்ளே பொது நலத்திற்கு விரோதமான வேற்றுமைகளை அவரவர்கள் கண்டா இடத்தில் நீக்கிக் கொள்ள வேண்டுமேயல்லாது நமது பொது நாள்ச செய்திகளைக் காட்டிலும் வேற்றுமைச் செய்திகள் வெகு முக்கியம் போல பின்னவற்றையே பிரமாதமாக முரசொலியுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கலாகாது.

புதுவை “இந்தியா”, 1909 ம் ஆண்டு, செப்டம்பர் 4 இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார். 124 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பாரதியாரின் சிந்தனைகள் இன்றைக்கும் சிலருக்கு அறிவுரையாக பயன்படுகிறது. என்று குறிப்பிட்டு உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

4 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

4 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

5 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

5 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

5 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

6 hours ago