சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்பு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக கடந்த ஆட்சியின் போது விவசாயிகளை, பொதுமக்களை நேரில் அழைத்துப் பேசவேண்டும், குறைகளைத்தீர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினோம்.
கடந்த ஆட்சியில் எட்டுவழிச்சாலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசும் போது பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று தான்பேசினோம். நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை.
சட்டமன்றத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்தில் பொதுமக்களுக்கு பிரச்சினைகள் உள்ளது விவசாயிகள் அழைத்து பேசுங்கள் என்றுதான் சொன்னோம். அது சட்டமன்ற குறிப்பில் உள்ளது.
எட்டு வழி சாலை விவகாரம் என்பது ஒரு கொள்கை முடிவு. அதுபற்றி அமைச்சர் முடிவு எடுக்க முடியாது, அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.