இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வரும் லியோனியை தமிழ்நாடு பாடநுால் நிறுவன பொறுப்பிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என ஹெச் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க., அரசு தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து அவர்கள் மூலம் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. லியோனி போன்றவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இதை செய்தால் தான் முதல்வர் நாகரீகமானவர் என மக்கள் கருதுவர். தவறினால் அவர் கூறி தான் இதெல்லாம் நடப்பதாக மக்கள் நினைப்பர்.
தி.மு.க., இந்து விரோத கட்சி மட்டுமல்ல தேசவிரோத கட்சியும் கூட. இந்து முன்னணி நிர்வாகி கனல்கண்ணனை கைது செய்த தமிழக அரசு நடராஜபெருமானை அவதூறாக பேசிய யூடியூப் புரூட்டர்ஸ் மைனர் விஜயை ஏன் கைது செய்யவில்லை.
ஆளுங்கட்சி எடுபிடியாக போலீஸ் துறை செயல்படுகிறது. இந்து மதத்தை இழிவுபடுத்துபவரை போலீசார் கைது செய்வதில்லை. இதில் உள்நோக்கம் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்.
வெளிநாட்டில் இரண்டு கம்பெனிகளை காலி செய்து விட்டு இங்கு வந்தவர் தான் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழகத்தை திவாலாக்க முடிவு செய்து 15 மாதங்களில் ரூ.1.80 கோடி கடன் வாங்கியுள்ளார். மின் துறையில் வேலையாட்களை காலி செய்து விட்டு மின் கணக்கீடுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்துள்ளனர்.
கணக்கெடுப்புக்கு செல்லாமல் கணக்கிடுகிறார்கள். கால்நடைகளுக்கான அனைத்து தீவனங்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, விவசாயிகளின் விரோதியாக தி.மு.க., அரசு செயல்படுகிறது என்றார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.