ஈரோடு இடைத்தேர்தலில் வெல்வது யார்? முந்திய இபிஎஸ்… வெளியானது லயோலா கல்லூரியின் ரிப்போர்ட்!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடைபெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்தது

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக கள ஆய்வு நடத்தினர். அது குறித்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 42% சதவீதத்தில் இருந்து 49% சதவீத வாக்குகள் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு 31% சதவீதத்தில் இருந்து 36% சதவீத வாக்குகள் பெற வாய்ப்பு இருப்பதாகவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 6.90% சதவீதத்தில் இருந்து 10 சதவீத வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேமுதி, நோட்டா, மற்றும் பிற சுயேட்சை வேட்பாளர்கள் 5.58% சதவீத வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் 76.58% சதவீதத்தில் இருந்து 85% சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்ற ஆய்வில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 53% பேர் ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு 42% பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்த ஆய்வில் 50 பேர் ஈடுபட்டதாகவும் அதில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

44 seconds ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

15 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

17 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

17 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

17 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

18 hours ago

This website uses cookies.