பிபின் ராவத் உயிரிழந்த போது பிரதமர் ஏன் நீலகிரிக்கு வரவில்லை? திமுக எம்பி ஆ.ராசா கேள்வி.!!
உதகையை அடுத்த கேத்தி பாலாடா பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழ்நாட்டை நேசிப்பதாகவும், தமிழை நேசிப்பதாகவும் கூறுகிறார்.
மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் நட்டா பேசும்போது திமுகவும், ஸ்டாலினும் தமிழ்நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் என்றும், தமிழ்நாடு தனியாக இருப்பதாகவும் தேசிய ஓட்டத்திற்கு வருவதில்லை என கூறினார்.
ஆனால் பாகிஸ்தான், இந்தியா மீது படை எடுத்த போதும், கார்கில் போரிற்காக நிதியை வழங்கியதும் கலைஞர் தான். எங்களுக்கா தேச ஒற்றுமை இல்லைய என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர் வரும் 10ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி, பாரத் மாதா கி ஜே என்றும், தமிழை நேசிப்பதாகவும், கூறிவிட்டு செல்வார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது ஏன் அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை?
ராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகளை உற்பத்தி செய்யும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு ஏன் இதுநாள் வரை பிரதமர் மோடி வருகை புரியவில்லை என்றும் அவர் பேசினார். மேலும் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்த போது ஓடோடி வந்து தேசிய கொடியை போற்றி வீரவணக்கம் செலுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று பேசினார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.